Wednesday, December 26, 2012


உலகம் அழிந்தது.........


(பகுதி - 1)
     அன்று 21.12.12 இரவு பதினொன்றும் தாண்டிய பின்னிரவு நேரம் என்றுமில்லாத அமைதி எங்கும். திடீரென வானத்தில் இருந்து நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து விழத்துவங்கின. கொஞ்சம் நேரம் செல்லச்  செல்லச் நட்சத்திரங்கள் மழை போல் பூமியை நோக்கி விழ ஆரம்பித்தன. நேரம்  போகப் போக வானம் துண்டு துண்டுகளாக உடைந்து பூமியை நோக்கி விழத்துவங்குகின்றது. முட்டக்குடித்தவன் வாந்தி எடுப்பதைப் போல் பூமி இத்தனை காலமும் தன்னுள் தேக்கி வைத்திருந்த அனைத்தையும் அள்ளி வெளியே எறியத்துவங்க மனிதர்கள் 'மாயனை' முழுவதுமாய் நம்பத்துவங்கிவிட்டனர்.

     பெற்றவள் தன் பிள்ளையையோ, பிள்ளைகள் பெற்றவர்களை கவனிக்கப்  பொழுதில்லாமல் திருவிழாக் கூட்டத்தில் தொலைந்த குழந்தைகளைப் போல் பிதற்றிக்கொண்டும், ஓநாய் புகுந்த ஆட்டு மந்தைகள் போல் அங்கொருவர் இங்கொருவராய் ஏன் ஓடுகிறோம் என்றே தெரியாமல் ஓடிக்கொண்டும் முட்டிமோதிக் கொண்டுமிருக்க நான் முற்றும் தனிமைப் படுத்தப்பட்டுவிட்டேன்.

     என்னதான் நடக்கிறதென்பதைப் புரிந்து கொள்ளத் துவங்குமுன்னமே பூமி பிளக்கவாரம்பித்து அதன் மேல் நடப்பட்டிருந்த கட்டிடங்களை விழுங்கிக்கொண்டு தன்னுள்ளே புதைந்துபோயிருந்த கற்களையும் எரிமலைக் குழம்பையும் துப்பத்துவங்கியிருந்தது.

                                                                                                              (பகுதி - 2) >>>