Wednesday, December 26, 2012


உலகம் அழிந்தது.........


(பகுதி - 2)
     கடல் மிகப்பாரிய சத்தத்துடன் ஆங்கரித்துக்கொண்டிருந்தது. மீண்டும் ஒரு சுனாமியோ அல்லது இதுதான் இறுதியோ என்ற சந்தேகம் என்னையும் ஆட்கொள்ளத்துவங்கியது. மொத்தக் கூரையும் இடிந்து விழுந்தாற்போல் எதுவுமில்லாமையாய் பூமிக்கு மேல், எதுவுமில்லை என்றால் என்ன என்பதை உண்மையில் நான் உணர்ந்த தருணமது.

     பெரும் பெரும் மலைகளும் கற்பாறைகளும் பஞ்சுக் கூட்டங்களைப்போல் பறந்தவண்ணம் இருக்கின்றன. எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டதைப் போல் திரும்பும் பக்கங்களிலெல்லாம் அழிவு மட்டுமே தென்பட்டுகிறது, எனைச் சுற்றிலுமே பாரிய சத்தங்கள், எனைச் சுற்றிலும் எனும் போதுதான் அந்த உண்மை என்னைச் சுட்டது, ஆம் என்னைச் சுற்றிலும் யாருமே இல்லை இந்த உலகத்தில். நான் மட்டுமே, நானே நான் மட்டும்.
     
     பூமி ஒளி வழங்கும் உதவுகோள்கள் எதுவுமின்றி இருண்டுவிட்டது. என்னைச் சுற்றிலும் இருந்த மனிதகுல மாணிக்கங்களுக்கு என்னதான் நடந்தது என்பது உணர முடியா  ஒன்றாய் இருந்தது, சரி அதை விட்டு எனக்கு என்னதான் நடக்கப் போகிறது என்பதை நினைக்கத் தலைப்பட்டேன்.

                                                                                                               (பகுதி - 3) >>>>