ஊரோடி.....
(01)
கணக்காய்விற்கான அனுராதபுரம், வவுனியாப் பயணம்.
Audit inspection trip to Anurathapura & Vavuniyaபயணக்கட்டுரை.
எமது பயணம் 11.02.2013 திங்கட் கிழமை மதியம் சரியாகப் பன்னிரண்டு மணிக்கு கொழும்பில் இருந்து அநுராதபுரம் நோக்கி ஆரம்பமானது. எமது பயணக் குழுவிலே என்னுடன் Wijeyapala, Shehan, Anura மற்றும் Isharaka ஆகியோர் இணைந்திருந்தனர். எமது அமைச்சிலிருந்து எமது பயணம் ஆரம்பமானது. அடிக்கடி பயணங்கள் செய்வதால்
ஒரு வித சலிப்பு ஏற்பட்டிருந்தாலும் புதிய, புதிய இடங்களைப் பார்வையிடுதல்
மேலிருந்த காதலால் ஒரு ஆர்வமும் மேலிட்டிருந்தது.
அனுராதபுரத்திற்கு புத்தளம் ஊடாகச் செல்வதற்கு முடிவு செய்யப்பட்டு நீர்கொழும்பினூடாக புத்தளம் நோக்கி அமைந்தது எமது பயணத்தின் முதற்கட்டம். நீர்கொழும்புவரை வாகன நெரிசல் மிக அதிகமாகக் காணப்பட்ட போதிலும் நீர்கொழும்பு தாண்டிச் செல்லச் செல்லச் வாகன நெரிசல் குறைந்து ஒரு அமைதியான நீர் நிலையில் செல்லும் படகாய் எமது வாகனம் பயணம் செய்தது. வழுக்கிச் செல்லும் கண்ணாடிபோலும், மிக அகன்றதாயும் பாதைகள் இருந்ததால் பயணத்தினை மிக விரைவாகவும், சொகுசாகவும் மேற்கொள்ளக்கூடிய நிலை காணப்பட்டது. பிற்பகல் இரண்டு முப்பது மணியளவில் ஓர் சிறு இடைப்போசணத்திற்காக சிலாபம் நகரில் நிறுத்தினோம்.
அனுராதபுரத்திற்கு புத்தளம் ஊடாகச் செல்வதற்கு முடிவு செய்யப்பட்டு நீர்கொழும்பினூடாக புத்தளம் நோக்கி அமைந்தது எமது பயணத்தின் முதற்கட்டம். நீர்கொழும்புவரை வாகன நெரிசல் மிக அதிகமாகக் காணப்பட்ட போதிலும் நீர்கொழும்பு தாண்டிச் செல்லச் செல்லச் வாகன நெரிசல் குறைந்து ஒரு அமைதியான நீர் நிலையில் செல்லும் படகாய் எமது வாகனம் பயணம் செய்தது. வழுக்கிச் செல்லும் கண்ணாடிபோலும், மிக அகன்றதாயும் பாதைகள் இருந்ததால் பயணத்தினை மிக விரைவாகவும், சொகுசாகவும் மேற்கொள்ளக்கூடிய நிலை காணப்பட்டது. பிற்பகல் இரண்டு முப்பது மணியளவில் ஓர் சிறு இடைப்போசணத்திற்காக சிலாபம் நகரில் நிறுத்தினோம்.
அதன் பின்னர் எமது பயணம் புத்தளம் ஊடாக அனுராதபுரம் நோக்கி மிக வேகமாக நகர்ந்தது, புத்தளம் நகரைக் கடந்த பின்னர் புதிதாக 2012 "தேசத்திற்கு மகுடம்" நிகழ்சிக்காக அமைக்கப்பட்ட பாதையில் எமது பயணம் தொடர்ந்தது, பாதையின் இரு மருங்கிலும் கண்ணுக்குக் குளிர்ச்சியான இயற்கை காட்சிகள் கண்ணுக்கு விருந்து படைத்தன.
பிற்பகல் நான்கு மணியளவில் அனுராதபுரம் நகரினைச் சென்றடைந்தோம். அதன் பின்னர் எமது அமைச்சின் சுற்றுலா விடுதியை அடைந்து நீராடி, இரவுணவினையும் முடித்துக்கொண்டு பயணக்களைப்பு மேலிட விரைவிலேயே உறங்கச்சென்றோம்.
அதனைத் தொடர்ந்த வாரநாட்கள் அனுராதபுர மாவட்டச் செயலக கணக்காய்விலே கழிந்தன. பின்னரான வார இறுதி நாட்களில் அனுராதபுர நகரின் புராதன தலங்களைப் பார்வையிடச் சென்றோம்.
பிற்பகல் நான்கு மணியளவில் அனுராதபுரம் நகரினைச் சென்றடைந்தோம். அதன் பின்னர் எமது அமைச்சின் சுற்றுலா விடுதியை அடைந்து நீராடி, இரவுணவினையும் முடித்துக்கொண்டு பயணக்களைப்பு மேலிட விரைவிலேயே உறங்கச்சென்றோம்.
அதனைத் தொடர்ந்த வாரநாட்கள் அனுராதபுர மாவட்டச் செயலக கணக்காய்விலே கழிந்தன. பின்னரான வார இறுதி நாட்களில் அனுராதபுர நகரின் புராதன தலங்களைப் பார்வையிடச் சென்றோம்.
![]() |
| IHLAS IM, wijepala(HD), shehan |
பின்னர் திங்கட் கிழமை காலை வவுனியாவிற்கான பயணத்தினை மேற்கொண்டோம், காலை
ஒன்பது மணியளவில் வவுனியா மாவட்டச் செயலகத்தை அடைந்து கணக்காய்வினைத்
தொடர்ந்தோம். தொடர்ச்சியாக ஒரு வாரம் வவுனியா மாவட்டச் செயலகத்தில் கணக்காய்வில் ஈடுபட்டோம். நாங்கள் வவுனியாவில் தங்கியிருந்த ஒரு வாரமும் மழை தொடர்ச்சியாகப் பொழிந்த வண்ணமே இருந்தது.
வெள்ளிக்கிழமை இரண்டு மணியளவில் எமது வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் கொழும்பு நகர் நோக்கிப் புறப்பட்டோம். வரும் வழியில் இலங்கைக்கு பெளத்த மதம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இடமான "மிஹிந்தலைக் குன்றுக்கும்" சென்று பார்வையிட்டோம்.
![]() |
| IHLAS IM, Anura, shehan |
![]() |
| IHLAS IM, shehan |
![]() |
| IHLAS IM, Anura, shehan |
![]() |
| IHLAS IM, Anura, shehan |
![]() |
| IHLAS IM, Anura, Isharaka |
![]() |
| IHLAS IM |
அதன் பின்னர் எமது பயணத்தினைத் தொடர்ந்து இரவு பத்து மணியளவில் கொழும்பு நகரை வந்தடைந்தோம்.







No comments:
Post a Comment